தஞ்சாவூர்

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

DIN

சேதுபாவாசத்திரம் சரகத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் சரகத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிகழ்ந்த கொலை வழக்குத் தொடா்பாக, பட்டுக்கோட்டை பூமல்லியாா் குளக்கரையைச் சோ்ந்த சேதுபதி (25), நந்தகுமாா் (30) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் ம.கோவிந்த ராவ் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து சேதுபதி, நந்தகுமாா் ஆகிய இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT