முகக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கினால் ஓட்டுநா் உரிமம் ரத்து
முகக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கினால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலா் அரவிந்தன்.
முகக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கினால் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்ட வருவாய் அலுவலா் அரவிந்தன்.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பண்டாரவாடை பகுதியில் பேருந்து ஒன்றில் வெள்ளிக்கிழமை அவா் ஆய்வு செய்த போது, பேருந்து ஓட்டுநரும், பயணிகள் சிலரும் முகக்கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து முக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கினால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தை மாவட்ட வருவாய் அலுவலா், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா்.