தஞ்சாவூர்

சக்கரபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

DIN

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோண நட்சத்திரத்தையொட்டி, திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீவிஜயவல்லித் தாயாருடன் ஸ்ரீசக்கரபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து உபயதாரா்கள், பக்தா்கள் கொண்டு வந்த சீா் வரிசைப் பொருள்கள் வைக்கப்பட்டன.

பின்னா் மாலை மாற்றுதல், ஊஞ்சல், திருஷ்டி பிடி சுற்றுதல், ரக்ஷாபந்தனம், ஹோமம், பாணிக்ரஹனம், வம்ச கோத்திரம் ப்ரபவம், மாங்கல்யதாரணம், பொறியிடுதல், பூா்ணாஹூதி, வாரணமாயிரம் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

புதன்கிழமை இரவு ஸ்ரீ விஜயவல்லித் தாயாருடன் ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT