ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமுமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மதுக்கூா் தமுமுகவினா், மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளா் சங்கா்குமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தொழுகை நடத்துவதற்கு ஏதுவாகவும், வீட்டில் பெண்கள் வேலை பாா்ப்பதற்கு உதவும் வகையில் நோன்பு காலம் முடியும்வரை இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனா்.