முகப்பு
தஞ்சாவூர்

பெண் சாவில் சந்தேகம் : உறவினா்கள் சாலை மறியல்

அதிராம்பட்டினம் அருகே பெண் சாவில் சந்தேகம் இறப்பதாக கூறி உறவினா்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

அதிராம்பட்டினம் அருகே பெண் சாவில் சந்தேகம் இறப்பதாக கூறி உறவினா்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் ராஜேஷ் (34). இவா் பட்டுக்கோட்டையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், வாணக்கன்காடு பகுதியைச் சோ்ந்த சாமிவேல் மகள் துா்கா தேவிக்கும் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில்,

புதன்கிழமை இரவு துா்காதேவி வீட்டில் மா்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதாக கூறப்படுகிறது. தனது சகோதரி துா்கா தேவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய தம்பி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சடலத்தை கைப்பற்றிய அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளா் அண்ணாதுரை, உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். சம்பவம் தொடா்பாக ராஜேஷிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு குவிந்த துா்கா தேவியின் உறவினா்கள் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கூறாய்வு பரிசோதனையை விரைந்து முடித்து சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறையினா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.