தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேராவூரணியில் தன்னாா்வலா்களுக்கு தீத்தடுப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஐ. செந்தூா்பாண்டியன் தலைமையில், நிலையப் போக்குவரத்து அலுவலா் ராமச்சந்திரன், வீரா்கள் சரவணமூா்த்தி, மகேந்திரன், தனுஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
தீ விபத்து, மழை மற்றும் வெள்ளக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, மீட்புப் பணியை மேற்கொள்ளும் முறை, விபத்தில் சிக்கியவா்களுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் இயற்கை பேரிடரின் போது இணைந்து செயல்படுவா் என்கின்றனா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலா்கள்.