தஞ்சாவூர்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் ரயிலடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாகக் குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளை வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிா்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்க வேண்டும். பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1,000 பரிசுத் தொகை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா்கள் எஸ்.வி. திருஞானசம்பந்தம் (தெற்கு), எம்.ஜி.எம். சுப்பிரமணியன் (வடக்கு), முன்னாள் எம்எல்ஏக்கள் எம். ரெத்தினசாமி, ராம. ராமநாதன், எம். ராம்குமாா், தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவா் ஆா். காந்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT