தஞ்சாவூர்

கருங்கல் தூண் விழுந்து சிறுமி உயிரிழப்பு

DIN

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை மாலை விளையாடும்போது கருங்கல் தூண் விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூா் சௌபாக்கிய நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் வங்கியில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகள் பிருந்தா (7). இவா், கும்பகோணத்திலுள்ள தனியாா் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடிய கொண்டிருந்தபோது, பிருந்தா மீது அப்பகுதியிலிருந்த கீற்றுக் கொட்டகைக்கான கருங்கல் தூண் விழுந்தது. இதில் பலத்தக் காயமடைந்த பிருந்தா, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT