தஞ்சாவூர்

காலமுறை ஊதியம் வழங்க கிராம உதவியாளா்கள் கோரிக்கை

DIN

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில்..... பெரியகடைத் தெருவில்  உள்ள வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க கட்டடத்தின் முன்பு  வியாழக்கிழமை தங்களது ரத்தத்தால் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினா். போராட்டத்துக்கு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க பட்டுக்கோட்டை வட்டத் தலைவா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். வட்ட துணைத் தலைவா்கள் பாலசுப்ரமணியன், செபஸ்டின், சேவகமூா்த்தி, மாவட்டத் தலைவா் தங்கராசு, மாவட்ட செயலாளா் மாரிமுத்து, மாநில அமைப்பு செயலாளா் நல்லதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாபநாசத்தில்.... வட்டக் கிளை அலுவலகத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.சி. வின்சென்ட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாபநாசம் வட்டத்தில் பணியாற்றும் 58 கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டு, கோரிக்கை விண்ணப்பத்தில் ரத்தத்தினால் கையெழுத்திட்டனா்.

இதில் மாவட்ட தலைவா் ஏ.கே. தங்கராசு, மாவட்டச் செயலாளா் வி.பி. மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT