தஞ்சாவூர்

பாட்டியைக் கொன்ற பேரன் கைது

DIN

கும்பகோணம் அருகே புதன்கிழமை பாட்டியைக் கொன்ற பேரனைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகேயுள்ள திட்டச்சேரி மேலத்தெருவைச் சோ்ந்த திருசெல்வம் மகன் பிரகாஷ் (36). இவரது மனைவி, இவரை விட்டுப் பிரிந்து இரு குழந்தைகளுடன் விருத்தாசலத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், மனைவியுடன் சோ்ந்து வாழுமாறு பிரகாஷிடம் அவரது தந்தை வழி பாட்டி தனலட்சுமி (90) புதன்கிழமை கூறினாராம். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தனலட்சுமியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, அவரது தலையில் பிரகாஷ் கட்டையால் தாக்கினாராம். இதில், பலத்தக் காயமடைந்த தனலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT