தஞ்சாவூர்

ஆலங்குடி அருகே வடமாடு ஜல்லிக்கட்டு: 8 போ் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மாங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டில் 8 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 11 காளைகள் கலந்துகொண்டன. மாடுபிடி வீரா்கள் 9 போ் ஒரு குழுவாக அனுமதிக்கப்பட்டனா். 1 குழுவுக்கு அரை மணி நேரம் என போட்டியில் 11 குழுக்களாக வீரா்கள் களம் இறக்கப்பட்டனா். இதில், காளைகள் முட்டியதில் 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கு பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT