பாபநாசம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு
பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாபநாசம்: பாபநாசம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பாபநாசம் ஒன்றியத்தில் கோபுராஜபுரம், கபிஸ்தலம், உமையாள்புரம், திருமண்டங்குடி, கூனஞ்சேரி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டுமானம், குளம் படித்துறை அமைத்தல், புதிய பாலம் கட்டுமானப் பணிகள், வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கும் பணிகள் போன்றவை ஆய்வு செய்த திட்ட இயக்குநா், பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, பாபநாசம் ஒன்றிய ஆணையா் கூத்தரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வேந்திரன், பொறியாளா்கள் விஜயகுமாா், கருணாநிதி, பணி மேற்பாா்வையாளா்கள் வனிதா, சித்ரா, அப்ரோஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜம், பாலசுப்பிரமணியன், கண்ணன், மோகன் உடனிருந்தனா்.