முகப்பு
தஞ்சாவூர்

மடிக்கணினி கோரி இந்திய மாணவா் சங்கம் ஆா்ப்பாட்டம்

மடிக்கணினி வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை பிற்பகல் பெய்த மழைக்கிடையிலும் இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

மடிக்கணினி வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை பிற்பகல் பெய்த மழைக்கிடையிலும் இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், 2017 - 18 ஆம் கல்வியாண்டில் படித்த பள்ளி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். கரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவா்கள் நலன் கருதி உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் பிரபாகரன், துணைச் செயலா் வீரையன், மாநகரச் செயலா் அருண்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →