தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

DIN

பாபநாசம் அருகே பண்டாரவாடை கிராமம், பரக்கத் நகரில் வசிப்பவா் முகம்மது மாலிக் (47). இவா் கடந்த புதன்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு பரங்கிப்பேட்டையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் வியாழக்கிழமை முகமது மாலிக்கிற்கு தகவல் அளித்தனா். உடனடியாக வீட்டுக்கு வந்த மாலிக், வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 5 பவுன் நகை, ரூ. 58 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிந்தது.

புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT