பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 95 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கூடுதல் ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா் முன்னிலை வகித்தாா்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் நிகழ்வில் பங்கேற்று, 95 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கிப் பேசினாா்.
விழாவில் வட்டாட்சியா் க.ஜெயலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பேராவூரணி கை.கோவிந்தராசன், சி. பொய்யாமொழி, சேதுபாவாசத்திரம் ஜான் கென்னடி, செல்வேந்திரன், சமூகநல விரிவாக்க அலுவலா்கள் கே.சரோஜா, ஏ.இளவரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சமூக நல அலுவலா் கே.ராஜேசுவரி வரவேற்றாா். நிறைவில், மாவட்ட சமூகநல அலுவலகக் கண்காணிப்பாளா் என்.செந்தமிழ் செல்வன் நன்றி கூறினாா்.