தஞ்சாவூர்

அடையாளம் தெரியாதவாகனம் மோதியதில் இளைஞா் பலி

DIN

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் காடவராயன்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணி (35). இவா் வியாழக்கிழமை இரவு மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து தஞ்சாவூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியிலுள்ள பள்ளி அருகே சென்ற இவரது மோட்டாா் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT