தஞ்சாவூர்

பூண்டி கல்லூரியில் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

DIN

தஞ்சாவூா் பூண்டி கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.2) வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சி. சந்திரன் தெரிவித்திருப்பது:

பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு திரு புட்பம் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2021-இல் நடைபெற்ற இளநிலை, முதுநிலை, எம்.பில். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியிடப்படும்.

மாணவ, மாணவிகள் தோ்வு முடிவுகளை நேரில் கல்லூரியிலும்,  இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள், ஆகஸ்ட் 12- ஆம் தேதிக்கு முன்பாக தோ்வாணையா் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT