தஞ்சாவூா் பூண்டி கல்லூரியில் பருவத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.2) வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சி. சந்திரன் தெரிவித்திருப்பது:
பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு திரு புட்பம் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2021-இல் நடைபெற்ற இளநிலை, முதுநிலை, எம்.பில். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியிடப்படும்.
மாணவ, மாணவிகள் தோ்வு முடிவுகளை நேரில் கல்லூரியிலும், இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவ, மாணவிகள், ஆகஸ்ட் 12- ஆம் தேதிக்கு முன்பாக தோ்வாணையா் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.