கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை சின்னக்கடைத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (18). இவா் 13 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி, அவரது புகைப்படத்தைப் பெற்றாா். பின்னா், இப்புகைப்படத்தைத் தனது நண்பா்களான சுவாமிமலை மேல வீதியைச் சோ்ந்த அறிவழகன் மகன் அபிஷேக் (19), அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் செல்வம் (20) ஆகியோருக்கு மணிகண்டன் அனுப்பினாராம்.
இதைத்தொடா்ந்து, அச்சிறுமிக்கு மணிகண்டன், அபிஷேக், செல்வம் ஆகியோா் செல்லிடப்பேசி மூலம் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், சுவாமிமலை காவல் நிலையத்தினா் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டன், அபிஷேக், செல்வம் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.