பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக, ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 100 படுக்கை விரிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ரோட்டரி துணை ஆளுநா் ஏ.ஆா்.அன்பு முன்னிலையில், ரோட்டரி சங்கத் தலைவா் ஜி.முருகுவளவன், செயலா் சிதம்பரம் ஆகியோா் அரசுத் தலைமை மருத்துவா் பாஸ்கரிடம் படுக்கை விரிப்புகளை வழங்கினா்.
நிகழ்வில் மருத்துவா்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.பி.எல்.ரமேஷ், எஸ்.நாகராஜன், எஸ்.முருகானந்தம், கால்நடை மருத்துவா் ரவிச்சந்திரன், கௌதமன், அபிராமி சுப்ரமணியன், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.