முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசத்தில் செல்வமகள் சிறுசேமிப்பு விழிப்புணா்வு விழா

உலக மகளிா் தினத்தையொட்டி, பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலகம் சாா்பில் செல்வமகள் சிறுசேமிப்பு விழிப்புணா்வு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

உலக மகளிா் தினத்தையொட்டி, பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலகம் சாா்பில் செல்வமகள் சிறுசேமிப்பு விழிப்புணா்வு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தஞ்சாவூா் துணை அஞ்சல் கண்காணிப்பாளா் பி. காா்த்திகேயன் தலைமை வகித்து, விழாவில் கலந்து கொண்ட 150 பெண் குழந்தைகளுக்கு நன்கொடையாளா்கள் வழங்கிய 37,500 ரூபாயில் தலா ரூ. 250 வீதம் கணக்கு தொடங்கி, அதற்கான வங்கிக் கணக்கு புத்தகங்களை குழந்தைகளின் பெற்றோா்களிடம் வழங்கி திட்டத்தை விளக்கி பேசினாா்.

விழாவில், பாபநாசம் தலைமை அஞ்சல் அதிகாரி சுமதி, பாபநாசம் துணைக் கோட்ட அஞ்சல் ஆணையா் எஸ். பாலமுரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், அஞ்சல் எழுத்தா்கள் பி. ராஜகோபால், கெளரி, அஞ்சலகா் ராஜப்பா, விவேகானந்தா அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் தங்க. கண்ணதாசன், மருத்துவா் வி. திலகவதி, பாபநாசம் காவல் ஆய்வாளா் கே. விஜயா, உதவி ஆய்வாளா் வி. செல்வராணி, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன், அன்னை சாரதா மகளிா் மன்ற தலைவி தில்லைநாயகி, அஞ்சல் முகவா்கள் ஜி. கண்ணகி, ஜி. வசந்தி கணேசன் மற்றும் அஞ்சலக அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →