தஞ்சாவூர்

சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: அமமுக உறுதி

DIN

பட்டுக்கோட்டையில் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என அமமுக வேட்பாளா் எஸ்.டி.எஸ். செல்வம் தெரிவித்துள்ளாா்.

பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் எஸ்.டி.எஸ். செல்வம், சாந்தாங்காடு , பாலமுத்தி, வேப்பங்காடு, ஆலடிக்குமுளை, கரம்பயம், வீரக்குறிச்சி காா்காவயல், கோட்டாகுடி, முதல்சேரி, சேண்டாகோட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டாா்

அப்போது, பட்டுக்கோட்டை தொகுதியில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை, சாலை விரிவாக்கம் மற்றும் குடிநீா் வசதி போன்ற பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என வேட்பாளா் எஸ் டி எஸ். செல்வம் உறுதி கூறினாா்.

இந்த பிரசார பயணத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் வி. ரெங்கராசு, மாவட்ட அவைத் தலைவா் எம். அபுல்ஹாசன், மாவட்ட அம்மா பேரவை செயலா் ஜவகா்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் (மகளிா்) சங்கீதா தா்மராஜ், நகரச் செயலா் பாண்டியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT