தஞ்சாவூர்

திருவையாறில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, திருவையாறு தொகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிபடுத்தவும் துணை ராணுவமான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 70 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், திருவையாறில் துணை ராணுவப் படை வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவையாறு அருகே நடுக்கடையில் தொடங்கிய இந்த அணிவகுப்பு திருவையாறு தேரடியில் முடிவடைந்தது.

இதில், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், காவல் துறையினா் என மொத்தம் 85 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT