தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை: சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் கரோனாவுக்கு பலி

DIN

பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி பாலகிருஷ்ணன்(60) கரோனா நோய் தொற்று காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 23, 771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் வி. பாலகிருஷ்ணன். இவர் பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். 

இவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

ஹாங்காங்கில் களைகட்டிய பாரம்பரிய 'பன் திருவிழா'

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

SCROLL FOR NEXT