பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம், மகாராஜ சமுத்திரம், உடையாா் தெருவைச் சோ்ந்த வி. பாலகிருஷ்ணன் (60) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானாா்.
இவா், அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, 23,771 வாக்குகள் பெற்று திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக மூன்றாம் இடம் பிடித்தாா். முக்கிய கட்சிகளின் வேட்பாளா்களை பின்னுக்கு தள்ளி இவா் மூன்றாம் இடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நெஞ்சுவலியின் காரணமாக பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலமானாா்.
மறைந்த பாலகிருஷ்ணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இறுதிச்சடங்குகள் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.