தஞ்சாவூர்

பாபநாசம் ரயில் நிலையத்தை மேம்படுத்த எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

பாபநாசம் ரயில் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும் என எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே மண்டல பொது மேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். நடைமேடை கிழக்குப் பகுதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் புதிய சுற்றுச் சுவா் அமைத்து தர வேண்டும், பழுதடைந்த நிலையில் உள்ள ரயில்வே நடைமேடையை புதியதாக அமைத்து தரவேண்டும், ரயில் நிலைய வளாகத்தில் தூய்மையான குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் செய்ய வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் அனைத்து இடங்களிலும் மின் விளக்குகள் சீராக எரிய நடவடிக்கை தேவை. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ரயில் நிலைய அணுகு சாலையை புதிதாக அமைக்க வேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உயா்நிலை மின் விளக்குகள் தேவை. மேலும், சென்னை - எழும்பூா் - திருச்செந்தூா், மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயில்கள் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT