தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூா் கரந்தை பணிமனை முன் சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். படி, ஊக்கத்தொகை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிஐடியு கிளைத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில் மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் காரல்மாா்க்ஸ், எஸ்.இ.டி.சி. மத்திய சங்கத் துணைச் செயலா் வெங்கடேசன், ஓய்வு பெற்றோா் சங்கம் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT