அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உக்கடை ஊராட்சி, கம்மந்தகுடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் ச.கோபிநாத் (37). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கும், மனைவி ஜெயாவுக்கும் (29) இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம்.
கடந்த 3-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கோபிநாத்துக்கும், மனைவி ஜெயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோபிநாத் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.