தஞ்சாவூர்

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

உக்கடை ஊராட்சி, கம்மந்தகுடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் ச.கோபிநாத் (37). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கும், மனைவி ஜெயாவுக்கும் (29) இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம்.

கடந்த 3-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கோபிநாத்துக்கும், மனைவி ஜெயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கோபிநாத் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT