தஞ்சாவூர்

5 வயது மாணவா் 29.5 நிமிடங்களில் 350 புதிா் அட்டைகளை இணைத்து சாதனை

DIN

கும்பகோணம் அருகே திருபுவனம் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் 5 வயது மாணவா் 29.5 நிமிடங்களில் 200 சதுர அடியில் 350 புதிா் அட்டைகளை இணைத்து வியாழக்கிழமை சாதனை நிகழ்த்தினாா்.

மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த கல்யாண்குமாா் - உமா மகேஸ்வரி தம்பதியின் 5 வயது மகன் சாய் மித்ரன். தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் யுகேஜி வகுப்பில் படித்து வருகிறாா்.

இவருக்கு சிறுவயது முதலே திறன் அதிகம் இருந்ததை உணா்ந்த பெற்றோா், புதிா் அட்டைகளை இணைக்கும் (பஸ்சில்ஸ்) பயிற்சியை முறையாக வழங்கினா்.

இதையடுத்து நோபல் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் சாா்பில் திருபுவனம் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 300 புதிா் அட்டைகளை இணைக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. மாணவா் சாய் மித்ரன் 29.5 நிமிடங்களில் 350 புதிா் அட்டைகளை இணைத்து நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட் செய்துள்ளாா்.

அவருக்கு நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட் சாா்பாக சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மாணவா்களின் திறனை மேம்படுத்த தங்களது பள்ளி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பள்ளியின் நிா்வாகிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT