தஞ்சாவூர்

போதைப் பொருள் விற்ற கடைக்கு சீல்

DIN

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருள்களை விற்ற கடைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

சுவாமிமலை வடக்கு வீதியில் நிஷாா் அகமது (36) நடத்தும் பெட்டிக் கடையில் இருந்த ஹான்ஸ், பான் மசாலா 38.600 கிலோ கிராம் ஹான்ஸ், பான் மசாலா போன்ற போதை பொருள்களை சுவாமிமலை காவல் நிலையத்தினா் அண்மையில் பறிமுதல் செய்து, நிஷாா் அகமதுவை கைது செய்தனா்.

இந்நிலையில் இக்கடை பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் கோயிலுக்கு அருகிலும், பள்ளிக்கு அருகிலும் இருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி சுவாமிமலை காவல் ஆய்வாளா் க. சிவசெந்தில்குமாா் பரிந்துரையின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா். சித்ரா தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை இக்கடையை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT