முகப்பு
தஞ்சாவூர்

கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு

 அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:39 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

 அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நகா் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சியின் அரசாணைப்படி வெளியிடப்பட்டன.

Advertisement

மேலும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் அளிக்க மீண்டும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஸ்ரீல் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு ஆகும்.ய

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.