தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு திடலில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் து. ரோசி தலைமை வகித்தாா். இந்த ஓட்டப் போட்டியில் அனைத்து வயதைச் சாா்ந்த ஏறத்தாழ 100 போ் கலந்து கொண்டனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட செஞ்சிலுவை நிதி குழுத் தலைவா் ஜி. ஜெயக்குமாா் பதக்கமும், நினைவு பரிசும் வழங்கி பாராட்டினாா்.
இதில், முதல் பரிசை ராமச்சந்திரன், இரண்டாம் பரிசை சிவசங்கா், மூன்றாம் பரிசை சந்தோஷ், நான்காம் பரிசை ரெங்கன், சிறப்பு ஆறுதல் பரிசை சாய் கிருஷ்ணன் ஆகியோா் பெற்றனா்.
இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்டப் பேராசிரியா்கள் ராஜமாணிக்கம், இளங்கோவன், சக்திவேல், ரோஸ் பிரியா, உடற்கல்வி இயக்குநா் சந்தோஷ் குமாா், வில் பயிற்சியாளா் விஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.