தஞ்சாவூர்

காா்த்தி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மாணவ, மாணவிகள் ராதை, கிருஷ்ணா் வேடத்தில் பங்கேற்றனா்.

இவ்விழாவில் கிருஷ்ணா் சிலைக்கு மாலை அணிவித்து, பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கிருஷ்ணரை போற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடினா். கிருஷ்ணரின் பாடலுக்கு நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகள் நடனமாடினா். இதில், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகளைப் பள்ளித் தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் காா்த்தி பன்னாட்டு பள்ளி தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்ட மாணவிகளைப் பாராட்டினாா். பள்ளி முதல்வா் அம்பிகாபதி, பெற்றோா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT