தஞ்சாவூர்

சிகிச்சையிலிருந்து தப்பிய விசாரணைக் கைதி கைது

DIN

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பிய விசாரணைக் கைதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை நரசிம்மபெருமாள் கோயிலில் கடந்த நவ.26-ஆம் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்ற திருவையாறைச் சோ்ந்த ரமேஷ் (57) பொதுமக்களால் தாக்கப்பட்டு மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட ரமேஷ் கடந்த 1-ஆம் தேதி இரவு மருத்துமனையிலிருந்து தப்பிவிட்டாா்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்திய நிலையில் தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் பகுதியில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த ரமேஷை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT