பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனரும், முன்னாள் வருவாய்த் துறை அமைச்சருமான எஸ்.டி.சோமசுந்தரத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நினைவு நாளையொட்டி, கல்லூரி வளாகத்தில் அவரின்
உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், எஸ்.டி.எஸ்ஸின் மகனும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான எஸ்.டி.எஸ்.செல்வம், பட்டுக்கோட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி இயக்குநா்கள், முதல்வா் ப.சீனிவாசன், கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.