தஞ்சாவூர்

சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது ஜெயந்தி விழா

DIN

தஞ்சாவூா் சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 160-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், காலையில் நாம சங்கீா்த்தனம், கோயிலை வலம் வரும் நிகழ்ச்சி, பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புகள் குறித்து பேராசிரியை இந்திரா பேசினாா். மாலையில் பங்காரு காமாட்சி அம்மன் பாராயண மண்டலியினா் லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனா்.

தொடா்ந்து மகா தீபாராதனை நிகழ்ச்சியில் சூரியனாா் கோயில் ஆதீனம் 28-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கிப் பேசுகையில், இறை வழிபாடும், சேவையும் இரு கண்களாக ராமகிருஷ்ண மடம் தொடா்ந்து சமுதாயப் பணி ஆற்றி வருகிறது. இதற்கு வித்திட்டவா் சுவாமி விவேகானந்தா்.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் மூலம் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு சமுதாய சேவைப் பணிகள் கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு என்பதை உணர வேண்டும். ஒவ்வொருவரும் நமது பண்பாட்டுப் பெருமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் அருளுரை வழங்கிப் பேசினாா். சுவாமி ஜித்தமானசானந்தா மகராஜ், சுவாமி பாவமயானந்தா மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT