தஞ்சாவூர்

மூதாட்டியைக் கட்டிப் போட்டு 5 பவுன் நகைகள் பறிப்பு

தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கட்டிப்போட்டு 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

DIN

தஞ்சாவூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கட்டிப்போட்டு 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் ஸ்தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ்மேரி (85). கணவா் இறந்துவிட்ட நிலையில் இவரது மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா்.

இதனால் வீட்டில் தனியாக வசிக்கும் ஆக்னஸ்மேரி மாடியிலுள்ள அறையை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு வைத்தாா். இதைப் பாா்த்து சனிக்கிழமை மாலை வந்த இரு மா்ம நபா்கள் ஆக்னஸ்மேரியிடம் வீடு வாடகைக்கு வேண்டும் என்றனா்.

இதை நம்பிய மூதாட்டி இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்றபோது, அவா்கள் நாற்காலியில் ஆக்னஸ்மேரியை வைத்து கட்டிப்போட்டு, அவரது கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் வளையல்கள், ஒரு பவுன் மோதிரம் என மொத்தம் 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். பின்னா் கூச்சலிட்ட ஆக்னஸ்மேரியை அக்கம்பக்கத்தினா் வந்து மீட்டனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT