தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் மகளிா் காவல் நிலையம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் காவல் நிலையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியது:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மகளிருக்கான அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீா்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புகாா் கொடுக்க வருவோரிடம் காவலா்கள் கனிவுடன் பேச வேண்டும். புகாா் கொடுப்போரிடம் முறையாக குறைகளை கேட்டறிந்து, புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன்,

வல்லம் டிஎஸ்பி பிருந்தா, ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா,

வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கலைவாணி ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினா்.

ஒரத்தநாடு காவல் உதவி ஆய்வாளா் சூா்யா மற்றும் மகளிா் காவலா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT