தஞ்சாவூர்

நெடுந்தெரு செல்வமுத்துமாரியம்மன்கோயில் பால்குட விழா

DIN

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் ஊராட்சி, நெடுந்தெரு அம்பலகாரத் தெருவிலுள்ள அருள்மிகு செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயில் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி குடமுருட்டி ஆற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி, சக்திகரகம், அக்னிச்சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

SCROLL FOR NEXT