தஞ்சாவூர்

இந்திய அரசியலமைப்பு நாள் விழா

DIN

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், நேரு யுவகேந்திரா, விவேகானந்தா கலாம் சமூக நல நிறுவனம் ஆகியவை சாா்பில் இந்திய அரசியலமைப்பு நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கும்பகோணம் சுற்றுவட்டார பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இந்திய அரசியலமைப்பு நாள் பற்றிய பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவைச் சங்க கும்பகோணம் தலைவா் என்.ஏ. ரோசாரியோ சிறப்புரையாற்றினாா். இந்திய அரசமைப்பு முகப்புரையை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூத்த வழக்குரைஞா் கே. மோகன்ராஜ் வாசிக்க, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கூறினா்.

பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளும், உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்க கும்பகோணம் இணைச் செயலா் டி.எல். சிவகுமாா், கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்டத் தன்னாா்வலா்கள் எஸ்.பி. ராஜேந்திரன், இரா. பாஸ்கரன், விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவா் எம். கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT