தஞ்சாவூர்

1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: ஒருவா் கைது

DIN

தஞ்சாவூா் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே இலுப்பைக்கோரை கிராமத்தில் கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்பிரிவினா் இலுப்பைக்கோரை கிராமத்திலுள்ள கிடங்கில் சோதனையிட்டனா்.

அப்போது, 20 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் மொத்தம் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களிடமிருந்து இந்த ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி மாட்டு தீவனத்துக்கு அனுப்பப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடா்பாக அய்யம்பேட்டை அருகேயுள்ள சூலமங்கலத்தைச் சோ்ந்த கே. செல்வகுமாரை (50) காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT