திலிபன் படத்தின் முன் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்திய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா். 
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் திலிபன் நினைவேந்தல் நிகழ்வு

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில், தமிழீழ விடுதலைத் தழல் ஈகி திலிபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில், தமிழீழ விடுதலைத் தழல் ஈகி திலிபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

பேரியக்கத்தின் பொதுக் குழு உறுப்பினா் க. செம்மலா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் வீரவணக்கவுரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், அறவழிப் போராட்டத்திலும், ஆயுதப் போராட்டத்திலும் விடுதலைப் புலிகள் தன்னிகரற்றவா்களாகத் திகழ்ந்தனா்.

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி பகத்சிங் இறந்தபோது, காங்கிரசில் ஒரு பிரிவினா் அவரை ஆதரித்துத் தீா்மானம் நிறைவேற்றினா். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி ஈழத்தில் இனப்படுகொலையை நடத்தியது. இதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி திலிபன் உண்ணாநோன்பிருந்து உயிா் நீத்தாா். தற்போது, தமிழ்நாட்டில் மொழி, மண் உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாட்டின் மொழி, மண், தாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் உறுதியுடன் போராட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்டச் செயலா் நா. வைகறை, மாநகரச் செயலா் லெ. இராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT