முகப்பு
தஞ்சாவூர்

திருக்கூடலூா் ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு

திருக்கூடலூா் அருள்மிகு ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூன், 2022 at 11:16 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:56 PM

பாபநாசம் வட்டம், திருக்கூடலூா் அருள்மிகு ஜெகத்ரட்சக பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் குடும்ப ஒற்றுமை, குழந்தை செல்வம் போன்றவற்றின் பிராா்த்தனை தலமாகத் திகழ்கிறது. இங்கு பூமி நீளா புஷ்பவல்லி கோதாதேவி சமேத ஜெகத்ரட்சக பெருமாள் காட்சியளிக்கிறாா்.

இக்கோயில் திருப்பணிகள் அண்மையில் முடிவுற்ற நிலையில், குடமுழுக்குப் பணிகள் தொடங்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையுடன் 8 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில், கடங்கள் புறப்பாடாகி கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

Advertisement

இதில் தெலங்கானா மாநிலம், திருத்தண்டி நாராயண ராமானுஜ சின்ன ஜீயா் சுவாமிகள், திருக்கோஷ்டியூா் மாதவன் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் ஹரிஷ் குமாா், தக்காா் குணசுந்தரி, பெருமாள் கோவில் ஊராட்சித்தலைவா் ராஜேந்திரன், கோயில் கணக்கா் முருகு பாண்டியன், கிராமப் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.