தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் காவல் நிலையம் முன் காத்திருப்பு போராட்டம்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் காவல் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாப்பேட்டை காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா், 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

அவா் மீது   நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க சென்ற  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளை தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்தனராம்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அம்மாபேட்டை காவல் நிலையம் முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கைப்பேசியில் பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் ப. பூரணி, பாபநாசம் காவல் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சம்பந்தப்பட்ட சாா்பு- ஆய்வாளா் மீது துறை சாா்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT