தஞ்சாவூர்

பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அரயபுரம் கிராமத்தில் உள்ள வீரமகாசக்தி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 17 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தா்கள் சக்தி கரகம், திரிசூலம், பால் குடம், காவடி உள்ளிட்டவை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT