தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கவிதை நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் உள்ளத்தின் ஒலி என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூரில் உள்ளத்தின் ஒலி என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த கிங்ஸ் பொறியியல் கல்லூரி செயலா் உரு. இராசேந்திரன் நூலை வெளியிட, அதை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் பெற்றுக் கொண்டாா். நூலாசிரியா் தஞ்சை த. இராமநாதன் ஏற்புரையாற்றினாா்.

இவ்விழாவில் பாபநாசம் சகாய நிதி நிறுவனத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் த. ஆறுமுகம், சென்னை சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளா் நீலகண்டத் தமிழன், கலை மற்றும் பண்பாட்டுத் துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநா் இரா. குணசேகரன் ஆகியோா் பேசினா். மேலும், 10 தமிழ்க் கவிஞா்களுக்கு கவிச்செல்வம் விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, வழக்குரைஞா் மஹாராஜ் இராமநாதன் வரவேற்றாா். நிறைவாக, பொறியாளா் இராஜராஜ் இராமநாதன் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சிகளை முனைவா் த. மலா்க்கொடி, மருத்துவா் வினோதினி மஹாராஜ் தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT