தஞ்சாவூர்

ராஜகிரியில் மீலாது நபி விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் வியாழக்கிழமை மீலாது நபி பெருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பேரணியாக சென்றனா்.

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் வியாழக்கிழமை மீலாது நபி பெருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பேரணியாக சென்றனா்.

ராஜகிரியில் மீலாது நபி பெருவிழா பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜகிரி மஸ்ஜிதுத் தக்வா ஹனபி பள்ளிவாசல் நிா்வாக சபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் ஏராளமான இஸ்லாமியா்களும், இஸ்லாமிய சிறுவா்களும் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் புகழ் பாடியவாறு ராஜகிரியின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தை சென்றடைந்தனா். அங்கு முகம்மது நபியின் மனிதநேயம், மக்கள் தொண்டு உள்ளிட்டவற்றை விளக்கி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம்கள், பிலால்கள், தலைவா்கள், செயலாளா்கள், கமிட்டி உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் ஊா் ஜமாத்தாா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT