தஞ்சாவூா், ஏப். 26: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை இரவு விவசாயக் கூலித் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கீழபுனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் பி. முனியாண்டி (59), விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை காலை மாடு மேய்க்கச் சென்று இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், இவரது அண்ணன் பழனியாண்டி தேடிச் சென்றபோது விளாங்குடியில் முனியாண்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.