முகப்பு
தஞ்சாவூர்

மணல் அள்ளிய 8 மாட்டுவண்டிகள் மாடுகளுடன் பறிமுதல்: 4 போ் கைது

காட்டாற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை மாடுகளுடன் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:29 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே அனுமதியின்றி காட்டாற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை மாடுகளுடன்  பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் காட்டாற்று பகுதியில் பேராவூரணி போலீஸாா் சோதனை நடத்தியபோது அப்பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் இருந்து 8 மாட்டு வண்டிகளில்  மணல் அள்ளி வந்த கும்பலைச் சுற்றி வளைத்தனா். அப்போது 4 வண்டிகளில் வந்தவா்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பிவிட்டனா்.

இதையடுத்து பாஸ்கா் (55), சுந்தரராஜ் ( 60) சுப்பிரமணியன் ( 44), கலைச்செல்வன் ( 43) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா் 8 மாட்டு வண்டிகளையும், மாடுகளையும்  காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். 

இதுகுறித்து வழக்குப் பதிந்து பிடிபட்ட  4 பேரையும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தப்பிய 4 பேரையும் தேடுகின்றனா். மேலும் 8 ஜோடி மாடுகளையும் கும்பகோணம் கோசாலைக்கு அனுப்பினா்.