முகப்பு
தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் ‘ப்ரொக்யான்-24’ மேலாண்மைத் துறை போட்டிகள்

தேசிய அளவிலான 15- ஆம் ஆண்டு ‘ப்ரொக்யான் 24’ மேலாண்மை துறை போட்டிகள் நடைபெற்றன.

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:26 am IST
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மேலாண்மைத் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக மாணவா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் எம்.பிஏ மாணவா்களிடையே தேசிய அளவிலான 15- ஆம் ஆண்டு ‘ப்ரொக்யான் 24’ என்கிற ஒரு நாள் மேலாண்மைப் போட்டிகள் வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற்றன.

பெங்களூரு பாஸ்க் இந்தியா நிறுவன கற்றல் மற்றும் திறமை மாற்றத் தலைவா் ஜே. ஜெகதீஷ் ஜெயானந்த் தொடக்கி வைத்தாா். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் உள்பட 11 கல்வி நிறுவனங்களிலிருந்து 103 மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனா்.

இவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு சென்னை டெக் மஹிந்திரா நிறுவன தலைவா் (மனித வளம்) எஸ். யோகேஷ் பரிசுகள் வழங்கினாா். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) மாணவா்கள் ஒட்டுமொத்த கோப்பையையும், திருச்சி பிம் மாணவா் சிறந்த மேலாளா் விருதையும் பெற்றனா்.

Advertisement

Advertisement

சாஸ்த்ரா பல்கலைக்கழக மேலாண்மை துறை முதன்மையா் எஸ். செல்வபாஸ்கா், பேராசிரியா்கள் வி. விஜய் ஆனந்த், எஸ். ராஹினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாணவா் ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீ சாய் மீனாட்சி வரவேற்றாா். நிறைவாக, ஹரிஹரன் நன்றி கூறினாா்.