முகப்பு
தஞ்சாவூர்

புளியக்குடியில் பகுதிநேர அங்காடி கோரி மறியல்

Updated On : 1 மார்ச், 2024 at 2:22 AM
பகிர்:

அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சி பொதுமக்கள் புளியக்குடி வடக்குத் தோப்புப் பகுதியில் பகுதிநேர அங்காடி கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புளியக்குடி ஊராட்சியில் உள்ள 630 குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க அப் பகுதி தண்டவாளத்தைக் கடக்க வேண்டும், அல்லது சுமாா் 3 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் புளியக்குடி வடக்குத் தோப்புப் பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்க அரசை நீண்ட காலமாக வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை புத்தூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் மி. இளவரசு மற்றும் போலீஸாா் சுமாா் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னா் விடுவித்தனா்.

Advertisement